சற்று முன்:
நண்பர்: மதத்தை எல்லாம் விடுங்க! ஆனால், கடவுள் என்ற ஒன்றை நம்பித்தான் ஆகனும்!
நான்: எதுக்குங்க?
நண்பர்: உலகை படைத்தது கடவுள்! உயிர்களை படைத்தது கடவுள்!
நான்: இதை யார் கண்டுபிடிச்சா?
நண்பர்: இல்லை என்பதை யார் கண்டுபிடிச்சா?
நான்: சரி! நீங்கள் நம்புற படி கடவுள்தான் உயிரை படைத்ததாக இருந்துட்டு போகட்டும்! அதுக்கு எதுக்கு கோவில் கட்டி பூஜை செய்யனும்?
நண்பர்: உலகை உயிரை படைத்த கடவுளுக்கு நன்றியை செலுத்துவதற்காக கோவில் கட்டி பூஜை செய்கிறார்கள்.
நான்: உலகை, உயிரை கடவுள் உருவாக்கியதா? இல்லையா? என்பதில் உங்களுக்கு சந்தேகமில்லாமல் இருக்கலாம். ஆனால், எனக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால், உங்களை உருவாக்கியது உங்கள் தாய் தந்தையர். உங்கள் அறிவுக்கும், இருக்கும் சொத்துக்கும் அவர்கள்தான் காரணம். இது உண்மை. இந்த உண்மையை நீங்களும் நானும் மறுக்க முடியாது. உண்மையா? இல்லையா?
நண்பர்: உண்மை!
நான்: ஆதாரமே இல்லாத ஒன்றுக்கு நம்பிக்கை அடிப்படையில் கோவில் கட்டி பூஜை செய்கிறீர்கள்! அந்த கோவிலுக்குள் உள்ளே நுழைந்து பூஜை செய்யக்கூட உங்களுக்கு அனுமதி இல்லை, நீங்கள் உள்ளே நுழைந்தால் தீட்டு பட்டுடும் என்று சொல்லுகிறார்கள்! ஆனால், உங்கள் உயிருக்கும் உடமைக்கும் காரணமான உங்கள் பெற்றோருக்கு ஏன் கோவில் கட்டுவதில்லை? ஏன் பூஜை செய்வதில்லை?
நண்பர்: அவங்க உயிரோட இருக்காங்க?
நான்: அப்ப கடவுள் செத்துடுச்சா?
நண்பர்: அட போங்க! உங்களோட பேச முடியாதுங்க!
- திராவிடப் புரட்சி
No comments:
Post a Comment